இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக நீதி - உலகநாதர் - பாடல் 9

9. மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்           பிறந்த பொன்நாட்டைப் பகடி செய்யாதே      மனம்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்           கோபத்தில் கொந்தளித்துத் திரியாதே      கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்           பிறரை அழ வைத்து இன்பம் காணாதே      காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்           இல்லாத விஷயத்தை இருப்பதாக இயம்பாதே      புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்           பிறரை நோகடிக்கும் சொற்களைச் சொல்லாதே      புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்           கோள் மூட்டித் திரிவாரோடு தோள் சேராதே      மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே           வாமன ரூபன் சோதரி பார்வதிப் புதல்வனாம் என் அரசன் மயில்வாகனனை வாழ்த்த...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 8

8. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்      பொல்லாதோர் சகவாசம் எந்நாளும் கொள்ளாதே செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்      உதவிசெய்த சான்றோரை ஒருபோதும் மறக்காதே ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்      யாரோடும் புறம்பேசித் திரியாதே உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்      சுற்றத்தை குறையொன்றும் சொல்லாதே பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்      புகழ்தரும் செயலைச் செய்யத் தயங்காதே பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்      யாருக்கும் அடிமையாய் இருக்காதே வாராருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே      பெருமைமிகு குறமகள் வள்ளி மணவாளன் மயில்வாகனன் பெருமையை வாழ்த்து என்                நெஞ்சே