இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக நீதி - உலகநாதர் - பாடல் 7

7.      கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்           பின்விளைவுகளை யோசிக்காமல் எதையும் செய்யாதே      கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்           தீயவை நிகழும் என எதிர்மறையாகப் பேசாதே      பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்           நடந்த கொண்டிருக்கும் சண்டையில் மூக்கை நுழைக்காதே      பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்           உனக்குச் சொந்தமில்லாத இடத்தில் குடிபுகாதே      இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்           மனையாளிருக்கத் துணையருத்தியைத் தேடாதே      எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்           உன்னில் எளியவரோடு பகை கொள்ளாதே      குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்      குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே           புள் மேயும் கொல்லை காக்கும் ஏழைப...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 6

6. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்           பசப்பு மொழி பேசுபவருடன் பழகித் திரியாதே      மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்           தன்னோடு உன்னைச் சமமாக எண்ணாதார் இல்லம் புகாதே      மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்           முன்னோரின் அறிவுரையை மீறி நடக்காதே      முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்           முன்கோபிகள் நட்பால் பின்விளைவுகளைச் சந்திக்காதே      வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்           கற்றறிவித்தவரிடம் கடன் வைத்துப் பழகாதே      வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்           திருடர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாதே      சேர்த்த புகழாளனொரு வள்ளி பங்கன்      திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே           அகிலம் புகழ் வள்ளி மணவாளன்,...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 5

 5. வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்           மணம் முடிக்காமல் மங்கையுடன் மனை புகாதே      மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்           இல்லாளை வன்சொல்லால் பழிக்காதே      வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்           நீயாகத் தெரிந்து போய் துன்பச் சேற்றில் சிக்காதே      வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்           சண்டையில் புறமுதுகு காட்டித் தப்பிக்காதே      தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்           தீமை செய்வாரோடு இணக்கம் கொள்ளாதே      தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்           உன்னை அண்டி இருப்பவரை வஞ்சினம் கொண்டு வையாதே      வாழ்வாருங் குறவருடைய வள்ளி பங்கன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே           செல்வக் கடவுள் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகன...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 4

 4. குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்           அடுத்தவரைக் குறை சொல்லித் திரியாதே      கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்           தீயோருடன் நட்பு பாராட்டி வாழ்க்கையை வீணாக்காதே      கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்           கல்வி கற்றோரிடம் எப்போதும் காழ்ப்பு கொள்ளாதே      கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்           நற்குலப் பெண்டீரை மணம் கொள்ள நினைக்காதே      கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்           ஆட்சியில் இருக்கும் அரசனை எதிர்த்துப் பேசாதே      கோயில்இல்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்           இறைவீடு இல்லாத இடத்துக்கு இடம்பெயராதே      மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே           ஒப்பில்லாக் குறவள்ளி மணவாளன் மயில்வாகன ...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 3

 3. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்           மனம் போல வாழ நினைத்து மாட்சிமை குறையாதே      மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்           அயலானை உற்றானென்று உறவு கொண்டாடாதே      தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்           பணம் சேர்க்கும் ஆசையில் பட்டினி கிடக்காதே      தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்           மறுமைக்குச் செல்வமான தானதருமத்தை மறக்காதே      சினந்தேடி அல்லலையும் தேட வேண்டாம்           கோபத்தால் துன்பத்தை உருவாக்கிக் கொள்ளாதே      சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்           கோபக்காரன் வாழும் வீட்டுவழியில் செல்லாதே      வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே           வேட்டைக் குலக் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகனை ...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 2

 2. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் மனமறிந்து உண்மை அல்லாததைப் பேசாதே      நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் உன் பெயரை நிலைக்க வைக்காத காரியத்தைச் செய்யாதே      நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் மனதில் வெஞ்சினத்தோடு யாருடனும் பழகாதே      நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் ஒத்துப் போகாதவருடன் நட்பு கொள்ளாதே      அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் தனித்துச் செல்லும்போது அசட்டுத் துணிச்சல் காட்டாதே      அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் பிறருக்கு எப்போதும் தீங்கு நினைக்காதே      மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே வலிமைமிகுக் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகனை மட்டும் வாழ்த்திப் பாடு                என் நெஞ்சே

உலக நீதி - உலகநாதர் - பாடல் 1

காப்பு : உலக நீதி புராணத்தை உரைக்கவே கலை களாய்வரும் கரிமுகன் காப்பு உலகநீதி என்னும் இந்தப் பாடல் புராணத்தை உரைக்க, வேதத்திற்கும் அரியவனாம் வேழமுகனே துணை. 1. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்           படிக்காமல் ஒரு நாளையும் கழிக்காதே      ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்           யாரையும் பழித்துப் பேசாதே      மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்           பெற்ற அன்னையை ஒருபொழுதும் மறக்காதே      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்           வஞ்சித்து வாழ நினைப்பவரோடு நட்பு கொள்ளாதே      போகாத இடந்தனிலே போக வேண்டாம்           பொல்லாச் செயல்கள் நிகழும் இடங்களுக்குப் போகாதே      போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்           முன்னால் சிரித்து, பின்னால் பழிக்கும் பழக்கம் கொள்ளாதே      வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்  ...