இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - நீதிநூல்

  வாழ்த்துப் பா பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும்தா. பாலும், தூய தேனும், வெல்லப் பாகும், துவரைப் பருப்பும் கலந்த பாயசம் உனக்குப் படைப்பேன். அகன்ற, யானை முகத்தை உடைய அழகிய தூய மணியே! சங்கத்தமிழ் மூன்றையும் எனக்கு அருளித் தா. 1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும் தீதொழிய நன்மை செயல். அனைத்துச் சமயமும் பகரும் நீதி ஒன்றே - தீயதைத் தவிர், நன்மையைச் செய். இந்த இரண்டைத் தவிர வேறெதுவும் இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு பொருட்டில்லை. தர்மம் தலைகாக்கும். தீமை தலை போக்கும். 2. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்  நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. இல்லாதவருக்கு இயன்றதை அளிப்பவர் உயர்ந்தோர், அளிக்காதவர் இழிந்தோர். இயற்கையின் ஒருபோதும் தவறாத நீதித் தராசுப் படி இந்த இரண்டைத் தவிர வேறு சாதிகள் எதுவுமில்லை.  3. இடும்பைக்கு இடும்பை இயலு...

மூதுரை - ஔவையார் - 26 -30

  மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல் 26. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன்-மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு. அரசனையும் அறிவார்ந்த ஒருவரையும் ஒப்பிட்டால் சான்றோனே சிறந்தவன். ராஜனுக்கு அவன் ராஜ்ஜியத்தில் மட்டுமே மதிப்பு, அறிஞனுக்கு அகிலமெல்லாம் சிறப்பு. ***** 27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார்சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம்கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்தொழுகாப் பெண். அறிவாளியின் அறிவுரை அறிவிலிக்குப் படிப்பினை தரும். அறமற்ற மூடருக்கு அந்த அறமே பாடம் புகட்டும். வலுவற்ற வாழையை அதன் காய்களே எடைமிகுந்து முறிப்பது போல, கணவனுடன் இசைந்து போகாத பெண் மனைக்கு மங்கலம் சேர்க்க மாட்டாள். ***** 28. சந்தன மென்குறடு தாந்தேய்ந்த காலத்தும் கந்தம்குறை படாது ஆதலால்-தம்தம் தனம் சிறியராயினும் தார்வேந்தர் கேட்டால் மனம் சிறியராவரோ மற்று பலகாலம் பயன்படுத்திய சந்தனக் கட்டை தேய்ந்தாலும் அதன் மணம் மங்குவதில்லை; ஈகை குணமுடைய செல்வந்தர்களின் பணம் தேய்ந்தாலும் அவரிடம் இரந...

மூதுரை - ஔவையார் - 21 -25

மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல் 21. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை இல்லாளும் இல்லாளே யாம்ஆயின்-இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலிகிடந்த தூறாய் விடும். நற்றுணைவி மனையிருக்க மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. துணைவனைச் சொற்களால் சுடும் மனைவி இருக்கும் வீடு வேங்கை உலவும் புல்காடு போன்றது, அது வசித்திருக்க உகந்ததன்று. ***** 22. எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த வினை. விதிப்படி கிடைப்பதுதான் கிடைக்கும் மூட மனமே. நினைப்பதெல்லாம் கிடைக்கும் என்றெண்ணி கற்பக மரத்திடம் சென்று இரந்தவருக்கு, முற்பிறவிப் பலனின்படி எட்டிக்காய்தான் கிடைக்கும் என்றால் அதை யாரால் மாற்ற முடியும்? ***** 23. கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். சாதாரணர்களின் கோபம் கல்லில் பிளவு போல உறவை உதறிச் செல்லும். அறிவாரின் சினம் பொன்னில் விளைந்த பிளவு போல கூடும் சாத்தியமுள்ளது. அது நீரைக் கிழித்த அம்பின்...

மூதுரை - ஔவையார் - 16 -20

மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல் 16. அடக்கம் உடையார் அறிவிலர்என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. தோற்றத்தைப் பார்த்துத் தேற மாட்டார் என்று எண்ணாதே. மடைத்திறப்பில் கொழுமீன் வரும் வரை கல் என நின்று கொத்தித் தின்னும் கொக்கின் அமைதியும் அஃதே. ***** 17. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. குளம் வற்றினால் பறந்தோடிப் போகும் நீர்ப்பறவைகள் போல அல்லாது, அதிலேயே முகையாகவும், முகிழாகவும் புதைந்தே இருக்கும் கொடியும், மலரும், மீனும் போன்றோரே உற்றார். சூழ்ந்து பிழைப்போர் சுற்றம் ஆகார். ***** 18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற் றல்லாதார் கெட்டால்அங்கு என்னாகும்-சீரிய பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும் என்னா மண்ணின் குடமுடைந்தக் கால். குணத்தின் மேலோர் வளத்தில் குறைந்தாலும் மேலோரே. பொன்னாலான குடம் உடைந்தாலும் மதிப்புதான், மண்ணாலான குடம் உடைந்தால் வெறும் மண்தான். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. ***** 19. ஆழ அமுக்கி முகக்கின...

மூதுரை - ஔவையார் - 11 -15

மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல் 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டுஉமி போனால் முளையாதாம்-கொண்டபேர் ஆற்றலுடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்ற கருமம் செயல். முழு நெல்லில் முளைக்கும் பயிர் முனை உடைந்து உமி போனால் விளையாது. அதேபோல், பேராற்றல் உள்ளவரும் கணக்கன்றிக் காரியங்களைச் செய்து முடிக்க முடியாது. எண்ணித் துணிகக் கருமம். ***** 12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். தாழை மலரை விட அதன் மடல் பெரிதானது. கடல் விரிந்தது, ஆனால் அதன் நீர் அருந்த முடியாதது. அளவு சிறியதானாலும் தாழம்பூவின் வாசமும், கடற்கரை ஊற்று நீரும் சுவையும் ரசித்து மகிழத்தக்கவை. அளவைக் கண்டு பயனை எடை போடாதே. ***** 13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். வனத்தில் வானெடுக வளர்ந்து நிற்பவை மட்டும் மரங்களல்ல. சபை நடுவே சுவடியைப் படிக்க முடியாமல், அதைக் குறிப்பிட்டு பிறர் இகழும்போதும் அதை உணராதவனும் கூட நல்ல மரம்தான். கல்வி கல்லா...

மூதுரை - ஔவையார் - 6 -10

மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல் 6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ-கல்தூண் பிளந்திறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். நட்புக்காக உயிர் தரும் மனத்திண்மை கொண்டவர், பகைவர் முன்னால் பணியார். பெரும் பாரம் தாங்காத கல்தூண் உடையுமே அன்றி ஒருபோதும் வளையாது. ***** 7. நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு-மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம். அல்லியின் உயரம் வெள்ளத்தளவு. ஆழ்ந்து கற்கும் நூலளவே கூரறிவு. செல்வம் முற்பிறவியில் செய்த நல்வினையளவு. வாய்த்த குடும்பத்தின் வளர்ப்பளவே குணம். ***** 8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. நற்குணத்தோரைப் பார்ப்பதும், அவர் சொல் கேட்பதும், அவரைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்துரைப்பதும், அவருடன் பழகி மகிழ்வதும் என்றும் நன்று. ***** 9. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே-தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும்...

மூதுரை - ஔவையார் - 1 -5

மூதுரை - ஔவையார் - 12ஆம் நூற்றாண்டு நீதி நூல் கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. வேழமுகக் கடவுளின் விரிந்த பாதங்களைத் தினந்தோறும் தொழு. அந்தச் செம்மேனியானைப் மலர்கள் கொண்டு அர்ச்சிப்போருக்கு நல்ல வாக்குவன்மையும், மனத் திண்மையும், மலரவள் அருளும்‌, உடல்நலமும் வளமும் கிட்டும். ***** 1. நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். நீ செய்த உதவிக்கு ஒருவர் எப்போது கைமாறு செய்வார் என எதிர்பார்க்காதே. தன் காலடியில் நீரைக் குனியாது உறிஞ்சி, தலையில் இளநீராகத் தரும் தென்னையைப் போல கொடையைப் பலன் எதிர்பார்க்காமல் செய். ***** 2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்து போல் காணுமே-அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர். நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவி என்பது கல் மேல் எழுத்து போல அவர் மனதில் நன்றியாக நீடித்து நிலைக்கும். வஞ்சக மனம் கொண்டோருக்கு செய்த கைம...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 81 - 90

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண் உழவன் ஆனாலும் இயற்கையை முழுக்க அழிக்காதே. அளவாக உழுது பூமியை வளமாக வைத்திரு. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் வான்நீர் குறைந்தால் வேள்விகள் குறையும். மழை பொய்ப்பின் மனங்கள் இறுகும். விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் சுற்றத்தாரை உபசரிக்காதவர் எந்த நன்நெறிகளும் இல்லாதவர். உற்றம் பேணாதார் ஒழுங்கீனமானவர். வீரன் கேண்மை கூரம்பு ஆகும் கோபக்காரனுடன் நட்பு கூரிய அம்பு போன்றது. எந்நேரத்திலும் குத்தும் வாய்ப்புள்ளது. உரவோர் என்கை இரவாது இருத்தல் ஊக்கமுள்ளோர் யாசிக்க மாட்டார்கள். மன திடம் உள்ளவன் மண்டியிட மாட்டான். ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு உள்ளத்தில் துணிவிருந்தால் செல்வம் வந்து சேரும். துணிந்தவனுக்குத் துக்கமில்லை. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை பற்றற்றவன் பேச்சில் பகல் வேஷம் இருக்காது. மேலோர் சிந்தையில் சிறுமை இருக்காது. வேந்தன் சீறி னாந்துணையில்லை அரசனைப் பகைப்பவருக்கு அணுக்கர் துணை இருக்காது. அதிகாரத்தை எதிர்ப்பது அழிவைத் தரும். வையம்தோறும் தெய்வம் தொழு தூணிலும் துரும்பிலும...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 71 - 80

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை   மாரி அல்லது காரியம் இல்லை மழையின்றி மன்னுலகம் மீளாது. நீரின்றி இவ்வுலகு இல்லை. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை மின்னலுக்குப் பிறகு மழை வரும். இன்னலுக்குப் பிறகு இன்பம் வரும். மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது மாலுமி இல்லாத கப்பல் கவிழ்ந்துவிடும். தலைமை இல்லாத நாடு தத்தளிக்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் முற்காலத்தில் செய்த நல்வினையும், தீவினையும் பிற்காலத்தில் திரும்பத் தரும். வினை முன் செய்யின் விளைவு பின் தெரியும். மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம் உன்னிலும் சான்றோர் சொன்ன சொற்கள் முதுநெல்லி போன்றவை. பலித்த பின்னே இனிப்பவை. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு வெறும் தரையில் படுத்துறங்காதே. இலவம் பஞ்சு மெத்தையில் துயில். மேழிச் செல்வம் கோழை படாது உழுதுழைத்து ஈட்டிய செல்வம் ஒருபோதும் கைவிடாது. தொழிலில் முதன்மை உழவே. மைவிழியார் தம் மனை அகன்றொழுகு பொய் மொழி பேசும் பெண்டிரை அண்ட விடாதே. வஞ்ச நெஞ்சம் கொண்ட வஞ்சியரை விட்டகல். மொழிவது மறுக்கின் அழிவது கருமம் அறிவார் அறிவுரையை மீறினால் அழிவு உறுதி. மூத்தோர் ச...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 61 - 70

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை பிறன் மனை புகாமை அறமெனத் தகும் அடுத்தவன் வாழ்வில் தலையிடாமல் இருப்பதும் அறம்தான். உன் இல்லமே உனக்கு இனிமை. பீரம் பேணி பாரம் தாங்கும் வீரம் உள்ளவன் சிக்கலைத் துணிவோடு எதிர்கொள்வான். உரம் உள்ளவன் உலகை ஆள்வான். புலையும் கொலையும் களவும் தவிர் ஊண் உண்ணுதல், உயிர் பறித்தல், உடைமை கவர்தல் - இவை மூன்றையும் செய்யாதே. உண்ணாமை, கொல்லாமை, கள்ளாமை கடைபிடி. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் பேராசை கொண்டோர் ஒழுக்கம் இழப்பார்கள். எதிலும் மிகுதி விரும்புவோர் ஏதிலிகள் ஆவார்கள். பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் ஞானம் பெற்றோருக்குச் சொந்தமும் சுகதுக்கங்களும் இல்லை. அவன் அருளுடையோர் அருகாமை விரும்பார். பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் பேதை குணம் பெண்மைக்கு அழகூட்டும். வஞ்சகமில்லா மனமே வஞ்சியருக்கு ஆபரணம். பையச் சென்றால் வையம் தாங்கும் எதிலும் நிதானத்தைக் கடைபிடித்தல் நல்லது. அவசரப்படுபவர் இலக்கை அடைய மாட்டார். பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் தீயன என்றுள்ள எல்லாவற்றையும் தவிர்த்துவிடு. கேடு கொடுக்கும் சகலத்தையும் விலக்கு. போனகம் என்...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 51 - 60

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை நீரகம் பொருந்திய ஊரகத்து இரு நீர்வளம் நிரம்பிய ஊரில் வசித்திரு. நீரின்றி அமையாது உலகு. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி சிறிய பணியானாலும் சிந்தித்து செய். நுட்பமாகத் திட்டமிட்டுச் செயலில் இறங்கு. நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு மூத்தோர் முதுமொழியைப் படித்து நட. நன்நூல் வழி நீதி ஒழுகு. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை நீ செய்யும் வஞ்சகத்தை யார் அறியாமல் போனாலும் உன் மனசாட்சி அறியும். தன் நெஞ்சத்தை விட நியாயமான நீதிபதி இல்லை. நேரா நோன்பு சீரா காது நேர்மையற்ற நோக்கம் நிறைவேறாது. பிறருக்குத் தீங்கிழைக்கும் திட்டம் தனக்கும் தீமையையே தரும்.  நைபவர் ஆயினும் நொய்ய உரையேல் வறியவராயினும் வசை உரைக்காதே. உன்னை விட எளியோரிடமும் இதமாகப் பேசு. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் பசித்திருப்பவன் நெருப்புக்குச் சமமானவன். நீ அறிய எவரையும் பசித்திருக்க விடாதே. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை புலால் புசிக்காமல் இருப்பதே உண்மையான நோன்பாகும். ஊன் உண்ணாததே உண்மையான உண்ணாநோன்பு. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் புண்ணியத்தின் அளவு பண்ணிய தானத்...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 41 - 50

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு துணைவனுக்கு இடர் வரும்போது பதறாத பெண்கள் துயரத்தைத் தருவார்கள். அன்பிலாப் பெண்டிர் அழிவை ஒப்பர். தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் மனையானோடு சண்டையிடும் மங்கையர் மரணத்திற்கு ஒப்பாவார்கள். நாவடக்கிப் பேசாதவள் நரகத்தைத் தருவாள். தெய்வம் சீறின் கைதவம் ஆளும் இறையருள் இல்லையெனில் துயர் வந்து அணையும். ஆண்டவன் அருளை அனுதினமும் நாடு. தேடாது அழிக்கின் பாடா முடியும் உழைக்காமல் உட்கார்ந்து தின்பவனின் நிலை வீணில் முடியும். உழைக்காமல் பிழைக்காதே. தையும் மாசியும் வையகத்து உறங்கு கூதல் காலத்தில் கூரையின் கீழ் படுத்துறங்கு. வெட்டவெளியில் படுத்தால் பனி வந்து சேரும். தொழுதூண் சுவையினும் உழுதூண் இனிது அண்டிப் பிழைத்து உண்பதை விட உழுது உழைத்து உண்பதே மேலானது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். தோழனோடும் ஏழைமை பேசேல் உன் வறுமையைப் பற்றி நெருங்கிய நட்புடன் கூட பேசாதே. ஏற்பது இகழ்ச்சி. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் தீயோர் நட்பு பாடாய் படுத்தும். கூடா நட்பு கேடாய் முடியும். நாடெங்கும் வாழக் கேடொன்றும் இ...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 31 - 40

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை சூதும் வாதும் வேதனை செய்யும் வாழ்க்கையில் விளையாட்டுத் தனமாக இருப்பதும், எப்போதும் சண்டை போடுவதும் துன்பத்தை உண்டாக்கும். வாயையும், மனதையும் கட்டி வை. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் நல்வினை மறந்தால் தீவினை ஆளும். நன்மை செய்வதை எந்நாளும் விடாதே. சேமம் புகினும் யாமத்து உறங்கு சேமம் என்றால் சந்தோஷம். எத்தனை பெரிய மகிழ்ச்சியாக இருந்தாலும் அதைத் தலைக்கு ஏற்றிக் கொண்டாடாதே. அளவோடு மகிழ்ந்து அடக்கமாய் இரு. சையொத்து இருந்தால் ஐயமிட்டு உண் தேவையானதை விட அதிக செல்வம் உன்னிடம் இருந்தால் பிறருக்குப் பகிர்ந்தளித்த பின் எஞ்சியதைப் புசி. தனக்கு மிஞ்சியதை தானம் செய். சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் அதீதமாக உண்போர் அற்றுப் போவார்கள். அளவோடு உண்டு, வளமோடு வாழ். சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் எதிலும் ஆர்வம் இல்லாது வாழ்பவர் சோம்பேறி எனப்படுவார்கள். சோம்பல் விலக்கு, ஊக்கமாய் இரு. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை மூதாதையின் சொல்லை விட முதிர்ந்தது எதுவுமில்லை. மூத்தோர் சொல் மறவாதே. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை தாயின் கருவறையை விட சிற...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 21 - 30

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை கேட்டில் உறுதி கூட்டும் உடைமை உடலில், உறவில் கேடு உண்டாகும்போது, சேர்த்து வைத்த செல்வம் கைகொடுக்கும். கஷ்டகாலத்திற்குக் காசைச் சேர். கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி செல்வத்தைக் காட்டிலும் மேலானது கல்வி. கல்வி இருப்பின் செல்வம் சேரும். கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி சமூகத்தில் பலம் வாய்ந்த ஒருவரோடு நட்பு பாராட்டுவது நன்மை பயக்கும். வலியோர் நட்பு வலிமை கூட்டும். கோட் செவிக்குறளை காற்றுடன் நெருப்பு வம்பு பேசுபவரிடம் சொல்லும் செய்தி காற்றுடன் சேர்ந்த நெருப்பைப் போலப் பல்கிப் பரவும். புறம் பேசுபவரிடம் நீ பேசாதே. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை பிறரைத் தூற்றினால் உனக்கும் பகை வந்து சேரும். பழிச்சொல் தனக்கே அழிவைத் தரும். சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை பெற்றோருக்கு அடங்கி நடப்பதே பிள்ளைக்கு அழகு. தாய், தந்தை தாள் பணி. சான்றோர் என்கை ஈன்றோளுக்கு அழகு தன் மகவைச் அறிஞன் எனப் பிறர் கூறக் கேட்பதே அன்னைக்குப் பெருமை. சான்றோன் எனக் கேட்டலே தாய்க்கு மகிழ்வு. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு சஞ்சலமில்லா மனதைக் கைகொள்வதே தவ...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 11 - 20

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை ஓதலின் நன்றே வேதியர் ஒழுக்கம் ஜப, தவங்களைக் காட்டிலும் ஒழுக்கத்துடன் வாழ்வதே சான்றோருக்குப் பணி. ஒழுக்கம் பேணி வாழ்வோரே உயர்ந்தவர். ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு பிறரை வீழ்த்த சூழ்ச்சி செய்வது அழிவைத் தரும். கேடு நினைப்பவன் கெடுவான். அஃகமும் காசும் சிக்கெனத் தேடு விளைபயிரையும், பொன் பொருளையும் கவனமாகப் பார்த்துக் கொள். பயிரும், பொன்னும் பாதுகாத்து வை. கற்பென்பது சொல் திறம்பாமை கொடுத்த வாக்குறுதியை எந்நாளும் கைவிடலாகாது. சொன்ன சொல்லை மீறி நடக்கக்கூடாது. காவற்றானே பாவையர்க்கு அழகு மேனி மெலிதலே பெண்டிருக்கு அழகு சேர்க்கும். உண்ணா நோன்பு மகளிர்க்கு மாண்பு. கிட்டாதாயின் வெட்டென மற கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்காதே. அதை உடனே மறந்துவிடு. கீழோராயினும் தாழ உரை உன்னிலும் எளியவரானாலும் அவர்களிடமும் பணிவாகப் பேசு. எல்லோரிடமும் பணிவாய் இரு. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை குறை கண்டுபிடித்தவாறே இருந்தால் உறவு விட்டுப் போகும். உற்றாரிடம் உரசல் கொள்ளாதே. கெடுவது செய்யின் விடுவது கருமம் தீய செயலைச் செய்தால் தீமையே விளையும். பொ...

கொன்றைவேந்தன் - ஔவையார் - 1 - 10

கொன்றைவேந்தன் ஔவையார் எழுதிய 12ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தாயும் தந்தையும் கண் முன்னே இருக்கும் கடவுள்கள். கண்ணறியாக் கடவுள்களுக்கு முன்னதாக அவர்களை வணங்கு. ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆலயத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும், அது இருக்கும் இடத்தை நோக்கியாவது தினமும் ஒருமுறை கைகூப்பித் தொழுதுவிடு. அதுவும் கூட உனக்கு நற்பலன்களை அளிக்கும். இல்லறம் அல்லது நல்லறம் அன்று மக்கள் கூடி வாழ ஒரு இல்லத்திற்குச் சமமான வாழ்க்கை வேறில்லை. இல்லறத்தில் இருக்கும் நிறைவு வேறெதிலும் இல்லை. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஈயாதார், பிறருக்குத் தன் செல்வத்தைப் பகிர்ந்து அளிக்காதவர், செல்வத்தைக் கள்வர் கவர்ந்து செல்வர். அளிக்காத காசு பலிக்காது. உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகு பெண்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக் காக்க வேண்டும். உடல் வனப்பைப் பேணும் பெண் என்றும் அழகி எனப் போற்றப்படுவாள். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் சமூகத்திற்கு ஒவ்வாத எந்தச் செயலும் முற்றிலும் அழிவைத் தரும். ஊரோடு ஒத்து வாழ் என்பதன் எதிர்ப்பத வாக்கு. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் பார்வை உடையோ...