இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 31 - 38

 31. சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே. தம்மிலும் சிறியார் தெரியாமல் செய்யும் தவறுகளைப் பொறுப்பது சான்றோர் கடமை. 32. சிறியோர் பெரும்பிழை செய்தனர் ஆயின் பெரியோர் அப்பிழைப் பொறுத்தலும் அரிதே. ஆனால் சிறியோர் பெரும்பிழை செய்தால் அதை ஆன்றோர் நிச்சயம் பொறுத்துக் கொள்ள மாட்டார். 33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் ஆனாலும் முட்டாள் முரடர்களின் நட்பு நீருக்குள் பாசி போல நிலையாது விலகும். 34. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. மாறாக, மேலோர் நட்பு ஒருநாளே ஆனாலும் பாறையைத் துளைக்கும் வேர் கொண்ட மரம் போல வலிமையாக நிலைக்கும். 35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே இரந்து பிழைத்தாலும் படிக்க வேண்டும். எப்பாடு பட்டாலும் கற்பதை நிறுத்தாதே. 36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதரா கும்மே. படிக்காதவன் குலப்பெருமை பேசுவது, நெல்லுக்கு நடுவே இருக்கும் புல்லும் நெல்லெனப் பெருமை கொள்வது போல நகைப்புக்குரியது. 37. நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன் ...

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 23 - 30

 23. அடினும்ஆ வின்பால் தன்சுவை குன்றாது சுட்டாலும் பாலின் சுவை கெட்டுப் போகாது. 24. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது தீயிலிட்டாலும் பசும்பொன் நிறம் குறையாது. 25. அரைக்கினும் சந்தனம் தன்மணம் மாறாது சந்தனத்தைச் சிதைத்தாலும் தன் மணமிழக்காது. 26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது கரியில் இட்டாலும் அகிலும் மணம் நாறாது. 27. கலக்கினும் தண்கடல் சேறா காது ஆழ்கடலைக் கலக்கினாலும் சேறு ஊறாது. 28. அடினும்பால் பெய்துகைப்பு அறாதுபேய்ச் சுரைக்காய் பசும்பால் இட்டுச் சமைத்தாலும் சுரைக்காய்க் கசப்பு மாறாது. 29. ஊட்டினும் பல்விரை உள்ளிகம ழாதே நறுமணப் பொருட்கள் சேர்த்தாலும் பூண்டு தன் வாசனையை இழக்காது. 30. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே தான் செய்த வினைப்படியே பெருமையும் சிறுமையும் சேரும். தத்தம் கருமமே கட்டளைக் கல்.

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 11 - 22

 11. பெண்டிர்க்கு அழகுஎதிர் பேசாது இருத்தல்        மௌன மொழி பேசுதல் மகளிர்க்கு அழகு. 12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்       மணாளனைச் சீராட்டல் மங்கையர்க்கு அழகு. 13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்       வனப்பைப் பேணுதல் வடிவஞ்சியருக்கு அழகு. 14. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்       நிறைகுடம் தளும்பாதிருத்தல் நிறைஞருக்கு அழகு. 15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை       நெறியுடன் வாழ்தல் வறியவருக்கு அழகு. 16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை       வானுற ஓங்கி வளம்பெற வளரினும்       ஒருவர்க்கு இருக்க நிழலா காதே      இனிய கனியின் பெரிய விதையிலிருந்து முளைத்து  வானுயர வளர்ந்து நின்றபோதிலும்             பனைமரத்துக்கு அடியில் எவருக்கும் நிழல் கிட்டாதே.  17. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை       தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்       நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை   ...

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

கடவுள் வாழ்த்து பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரண அற்புதமலர் தலைக்கு அணிவோமே ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் முதல்வனாகிய ஐந்து கர ஆண்டவனின் பாதமலர்களைத் தலைக்குச் சூட்டித் தொடங்குவோம். நூற்பயன் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் குற்றம் களைவோர் குறைவிலா தவரே. கொற்கை நகரத் தலைவனாகிய, வெற்றிவேலைக் கையில் ஏந்திய குலமுதல்வன் வீரராமன் நற்றமிழ் கொண்டு பகரும் இந்த நறுந்தொகையைப் படித்துத் தங்கள் குற்றங்களை நீக்குவரே நற்குணதோர். 1. எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும் கல்வி புகட்டுவார் கடவுளுக்குச் சமமாவார். 2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் கற்றதைத் தெளிவாக எடுத்துரைத்தலே அந்தக் கல்விக்கு அழகு. 3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் செல்வந்தருக்கு சொந்தபந்தங்களைப் போஷித்தல் அழகு. 4. வேதியருக்கு அழகு வேதமும் ஒழுக்கமும் அந்தணருக்கு அவர்கள் ஓதும் வேதமும் பேணும் ஒழுக்கமும் அழகு. 5. மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை நாடாளும் அரசனுக்கு நீதி வழுவாச் செங்கோல் அழகு. 6. வைசியருக்கு அழகு வளர்பொருள் ஈட்டல் வாணிபம் செய்பவருக்கு நல்வழியில் பொருளீட்டுவது அழகு. ...

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30

 27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். கடவுளின் கணக்கிற்கேற்ப, ஒரு விஷயம் வேண்டுமென நினைத்தால் இன்னொன்று கிட்டும், இல்லையென்றால் அதுவே கிட்டும், அதுவும் இல்லையென்றால் நினைத்தே பார்க்காத வேறொன்று கூட கிட்டும். எல்லாம் இறைவன் செயல். 28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான். உண்பதென்னவோ ஒருபிடி சோறு, உடுப்பது நான்கே முழத் துணி. ஆனால் மனதில் எப்போதும் மாளாத எண்ணங்கள். அருட்பார்வை அற்ற மனிதர்களின் வாழ்க்கை மண்பானை போல, மரிக்கும் வரை மனதில் துயரமே நிறைந்திருக்கும். 29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை-சுரந்தமுதம் கன்றுஆ தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர். பழுத்த கனியைப் புசியென்று பறவைகளை மரம் அழைப்பதில்லை. மடி சுரக்கும் பாலை அருந்தென்று மாடு தன் கன்றைக் கூப்பிடுவதில்லை. கொண்ட செல்வத்தை மறைக்காது மற்றவர்களுக்கு அள்ளி வழங்கும் எவரும் உலகத்தாருக்...

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 23 - 26

 23. வேதாளம் சேருமே வெளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே-மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை. ஊரார் மத்தியில் ஒருவரைப் பற்றிப் புறம் பேசிச் சிரிப்பவர் வீடு நல்லணிகள் இழந்து, தீக்குறிகள் பெருகி மேடாகிப் போகும். ஓரம் சொல்லின் வாழ்வு சோரம் போகும். 24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்-மாறில் உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி இல்லா மனை. திருநீறு அணியாத நெற்றி அழகின்றிப் பாழாகும். நெய்யில்லாத உணவு ருசியின்றிப பாழாகும். ஆறில்லாத ஊர் செழிப்பின்றிப் பாழாகும். உடன்பிறந்தார் இல்லாத பிள்ளை கண்டிப்பின்றிப் பாழாகும். மனைவி இல்லாத மனை பராமரிப்பின்றிப் பாழாகும். 25. ஆன முதலில் அதிகம் செலவானான் மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. பேராசை கொண்டு பெரும் பொருள் செலவழிப்பவன் மானமும், மதியும் கெட்டு, பிறர் பொருள் கரந்து, ஏழு பிறவியிலும் திருந்தாமல், நன்மை செய்வாருக்கும் பொல்லாதவனாக ஆவான். சிக்கனமே சிறந்த வாழ்க்கைமுறை. 26. மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை தானம...

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 19 - 22

 19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். அணையாத அனலான வயிற்றுப் பசியை அவிக்க அரைப்படி அரிசிக்காகப் பிறரை கும்பிட்டும், கெஞ்சியும், கடல் கடந்து சென்றும், பசப்பியும், துதி பாடியும் பலவாறு நடித்துப் பிழைக்க வேண்டியிருக்கிறதே? 20. அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்கும் கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். வடிவமிகு இழிபெண்டிரிடம் இன்பம் தேடுவதென்பது அம்மிக்கல்லைக் கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்குவதைப் போல, இப்பிறவிக்கும், இனி வரும் பிறவிகளுக்கும் இகழ்ச்சியைச் சேர்க்கும், சேர்த்த செல்வம் தொலைக்க வைத்து வறுமைக்கு வித்திடும். 21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும் வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும்சிவந்த தாமரையாள் தான் செந்தாமரையில் வீற்றிருக்கும் செல்வ லட்சுமி மனதில் வஞ்சமில்லாப் புண்ணியருக்கு உணவும், உறையுள்ளும், நிலமும், பேரும், புகழும், பெருவாழ்வும், ஊர...

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 15 - 18

 15. சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும். தெய்வம் தொழுவோருக்கு ஒருநாளும் இல்லை துன்பம். இவ்வழி செல்லாத எளியவருக்கு விதி விட்டதே கதி. 16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை கற்பழியா ஆற்றலால் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. நிலத்தின் தன்மையைத் தேங்கி நிற்கும் நீர் காட்டிவிடும்.  கொடுப்பவரின் குணத்தை கொடையின் திறம் காட்டிவிடும். கருணையின் ஒளியைக் கண்கள் காட்டி விடும். காதலின் ஆழத்தைக் கற்புநிலை காட்டிவிடும்.  இவையனைத்தும் இந்த உலகைச் சூழ் ஆழி ஒருநாளும் கரை மீறாதது போன்ற மாறாத உண்மைகளாம். 17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம்-வையத்து அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல் காலிப் பானையைக் கொதிக்க வைத்தால் அதில் பொங்குமோ பால்? செய்த வினை தீர்க்க செய்ய வேண்டிய தான தருமங்களைத தக்க சமயத்தில் செய்யாது, இப்பிறவியில் சங்கநிதியும், பதுமநிதியும் கை வரவில்லை என தெய்வத்தை நொந்தென்ன பயன்...

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

 11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும் என்னோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. ஒருநாள் சோறுண்ணாதே என்றால் முடியாதென்பாய். இரண்டு நாட்களுக்கு எதுவும் தர முடியாதென்றால் முரண்டு பிடிப்பாய். உன்னை நிரப்ப நான் படும் கஷ்டம் அறியாமல் துன்பம் தரும் என்னுடைய வயிறே, உன்னோடு வாழ்வதுதான் மிகவும் கஷ்டம். 12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. ஆற்றங்கரையில் வேர்பிடித்து நிற்கும் மரமும், அரசப் பதவியும் ஒருநாள் வீழும். உழவுத் தொழில் செய்து வாழ்வதற்கு ஒப்பான வேறு பணியில்லை. மற்றெல்லாப் பணியும் ஒருநாள் விட்டுப் போகும். 13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பர்-ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மே. இந்த பூமி மீது மெய்யான வலிமையுடைவரை யாரால் அழிக்க முடியும்? வலிமையில்லாமல் இறப்போரை யாரால் தடுக்க முடியும்? ஓயாமல் இரந்து நிற்பவரை யாரால் திருப்திப்படுத்த முடியும்? 14. பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால் இச்சைபல ...

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 8 - 10

 8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம் மரியாதை காணும் அகிலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். பணம்  ஈட்ட எவ்வளவுதான் முயன்றாலும் விதியின் துணையின்றி அது கைகூடாது; பொருள் மூலம் புகழ் தேடும் உலகத்தோரே, ஊழின் நல்வினையின்றி நிலைக்காது செல்வம். 9. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்அந் நாளும்அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. கடுங்கோடையில் நீர் வற்றி கால் பொசுக்கும் ஆற்றுமணலிலும் ஊற்றுநீர் ஊறி உலகோர் தாகம் தீர்க்கும்; ஆங்கே நற்குடியில் பிறந்தோர் செல்வம் குன்றிப் போனாலும் இரப்பவருக்கு இல்லை என மாட்டார். 10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்குஎன் என்றுஇட்டு உண்டிரும். உருண்டு புரண்டாலும் மாண்டவர் மீளார் மக்களே; ஆதலால் நாமும் வாழும்வரை காலன் நினைப்பின்றி களித்திருந்து, இல்லாதோருக்கு ஈந்து உண்டு உயிர்த்திருப்போம்.

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 4 - 7

4. எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லால்-கண்ணில்லான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக் கோலொக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. முன்வினைப் பயனின்றி முயன்றதை எல்லாம் முடித்து விட முடியாது, பார்வையற்றவன் பழம் பறிக்கக் ஊன்கம்பை எறிவது போல புண்ணியம் இருந்தால்தான் காரியம் நடக்கும், இல்லையேல் தனக்கே தீமையுண்டாகும். 5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின்என்றால் போகா-இருந்துஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். விதிவசத்தால் ஒன்று கிடைக்காது என்றால் கிடைக்காது, வந்ததைப் போ என்றாலும் போகாது. இது புரியாது கற்பனையில் கோட்டை கட்டி மனம் நொந்து மாண்டு போவதே மாந்தரின் இயல்பு. 6. உள்ள தொழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு. இந்த வையகத்தில் ஒருவருடைய சுகதுக்கங்களை மற்றொருவர் வாங்கிக் கொள்ள முடியாது. திரைகடலோடி திரவியம் சேர்த்தாலும் அதனால் உடல் தங்கி நிற்கும் உயிருக்கு என்ன பயன்? அவரவர் ஊழ்வினை அவரவருக்கு. 7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லப் ப...