திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 8 - 10

 8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்

மரியாதை காணும் அகிலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.

பணம்  ஈட்ட எவ்வளவுதான் முயன்றாலும் விதியின் துணையின்றி அது கைகூடாது; பொருள் மூலம் புகழ் தேடும் உலகத்தோரே, ஊழின் நல்வினையின்றி நிலைக்காது செல்வம்.

9. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்அந் நாளும்அவ்வாறு

ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லையென மாட்டார் இசைந்து.

கடுங்கோடையில் நீர் வற்றி கால் பொசுக்கும் ஆற்றுமணலிலும் ஊற்றுநீர் ஊறி உலகோர் தாகம் தீர்க்கும்; ஆங்கே நற்குடியில் பிறந்தோர் செல்வம் குன்றிப் போனாலும் இரப்பவருக்கு இல்லை என மாட்டார்.

10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா

நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

எமக்குஎன் என்றுஇட்டு உண்டிரும்.

உருண்டு புரண்டாலும் மாண்டவர் மீளார் மக்களே; ஆதலால் நாமும் வாழும்வரை காலன் நினைப்பின்றி களித்திருந்து, இல்லாதோருக்கு ஈந்து உண்டு உயிர்த்திருப்போம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30